Friday, June 19, 2009

பெண்களும் விழாக்களும்…..



பெண் என்பவள் பிறப்பெடுத்த பின் அவளின் வாழ்வே விழாக்கோலம் பூண்டுவிடுகிறது... பெண் குழந்தையென்றாலே சுமையாக கருதி “சிசு வதை” செய்து வந்த நம் சமூகம் இன்று நிறைய மாற்றங்களை சந்தித்துவிட்டது . எங்கோ சில இடங்களில் மட்டும் இது நீடிக்கிறது என்பது வேதனையே. .

இன்றைய “அப்பாக்கள்” பெண் குழந்தையை கொண்டாடி மகிழ்கின்றனர். தங்களுக்கு பெண் உருவில் தேவதை பிறந்து விட்டதாக சந்தொஷிக்கின்றனர்... வித விதமாக அவர்களை அலங்கரித்து பார்ப்பதில் தொடங்குகிறது பெண்ணின் அழகான விழாகாலங்கள்....

முதல் பண்டிகை....

சிறுமியாக வண்ண வண்ண உடைகளோடு உலா வந்த தேவதை முதன் முதலாக வெட்கப்படும் திருவிழா அரேங்கேறும்.. ....அவளின் தாவணிப் பருவம்....... அப்பா அம்மாவின் மனதில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தும் என்பது உணர்வுபூர்வமான உண்மையே ....


இக்காலப் பெற்றோர்க்கும் தங்கள் பெண்னை தாவணியில் பார்ப்பது என்பது அலாதி பரவசமே.....


சிறுமி மலர்ந்து பருவமங்கையாய் வலம் வருவதே பெண்ணின் முதல் பண்டிகை.....

மண விழா காணும் மங்கை...


மணக்கோலம் பூண்டு மனைவியாய் பதவி உயர்வு பெற்று நிற்கும் பெண் காணும் விழா “மங்களகரமான விழா” ... ஒவ்வொரு பெண்னும் கனவு காணும் இனிய விழா....

திருமணம் என்றாலே ஆணும் பெண்ணும் முக்கிய பங்குதாரர்கள் தான்.. எனினும் பெண் ஏற்க்கும் பொறுப்பு சற்று கூடுதலே........
பட்டு புடவை , கண் கவரும் நகைகள் , கை மணக்கும் மெகந்தி ...... அதிமுக்கியமாக முகம் நிறைந்த வெட்கங்களுடன் மணப்பெண்ணின் விழா களை சற்று அதிகமாகவே தெரியும். . . அந்நாள் முழுவதுமே பெண்ணிடம் தெரியும் பூரிப்பு தனி அழகு தான்...

மங்கை மனைவியான பெருமிதத்தோடு இனிதே நிறைவுறும் அவ்விழா.....

வளைகாப்பு...

ஒரு பெண் மிக அழகாக ஜொலிப்பது நிச்சயமாக இவ்வளைகாப்பு திருவிழாவில் தான்... எந்த ஒரு பொறுப்பில் சமூகத்தில் உயர்ந்தாலும் “தாய்மை” அடையும் பொழுது பெண்ணிற்கு தனி மரியாதை கிடைத்துவிடுகிறது.... தாயானதும் பெண் சாந்தமும் மனநிறைவு பெற்றுவிடுவதால் கூடுதல் மெருகேறி விடுகிறது....

கையில் நிறைய வளையல்கள் அடுக்கி கொண்டு கண்ணிற்க்கு நிறைவாக மாறி விடுவாள்...வயிற்றில் இருக்கும் தங்கள் செல்லத்தின் கூடுதல் நினைவுடன் வளையோசை சங்கிதம் பாட அவர்களுக்கென்றே ஒரு தனி உலகம் இருப்பது போல் பாவனை செய்துகொண்டு வாழும் “தாய்” தான் இவ்வுலகின் மிகவும் இனிமையான பண்டிகையை கொண்டாடுபவள்......

“ மங்கையராய் பிறப்பதற்கே

மாதவம் செய்திட தான் வேண்டும்”


இவ்வாறு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் அனுபவித்து விழாக்களாக கொண்டாடும் பாக்கியம் பெண்களுக்கே . . .

{ மொக்கையை நிதானமாக படித்தமைக்கு நன்றிகள் பல..}

3 comments:

  1. //சிறுமி மலர்ந்து பருவமங்கையாய் வலம் வருவதே பெண்ணின் முதல் பண்டிகை.....//
    //எனினும் பெண் ஏற்க்கும் பொறுப்பு சற்று கூடுதலே........
    பட்டு புடவை , கண் கவரும் நகைகள் , கை மணக்கும் மெகந்தி ...... அதிமுக்கியமாக முகம் நிறைந்த வெட்கங்களுடன் மணப்பெண்ணின் விழா களை சற்று அதிகமாகவே தெரியும். . . அந்நாள் முழுவதுமே பெண்ணிடம் தெரியும் பூரிப்பு தனி அழகு தான்...//

    //கையில் நிறைய வளையல்கள் அடுக்கி கொண்டு கண்ணிற்க்கு நிறைவாக மாறி விடுவாள்...வயிற்றில் இருக்கும் தங்கள் செல்லத்தின் கூடுதல் நினைவுடன் வளையோசை சங்கிதம் பாட அவர்களுக்கென்றே ஒரு தனி உலகம் இருப்பது போல் பாவனை செய்துகொண்டு வாழும் “தாய்” தான் இவ்வுலகின் மிகவும் இனிமையான பண்டிகையை கொண்டாடுபவள்......//

    சூப்பர்ராக ஒரு பெண்ணை பத்தி அழகா விளக்கமாக எழுதிருக்கிங்க கண்ணா!!.மேலே நான் குரிப்பிட்டிருக்கும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
    //இவ்வாறு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் அனுபவித்து விழாக்களாக கொண்டாடும் பாக்கியம் பெண்களுக்கே . . .// நூற்றுக்கு நூறு உண்மை.வாழ்த்துக்கள்!!
    தமிழிஷில் பதிவு செய்யலாமே..

    ReplyDelete
  2. நன்றி மேனகா.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.. இன்று தான் தமிழிஷில் பதிவு செய்துள்ளேன்...

    ReplyDelete
  3. ஹாய்,

    ரொம்ப நல்லா தெளிவா இருக்கு உங்கள் பதிவு..வாழ்த்துக்கள்..

    அன்புடன்,
    அம்மு.
    http://ammus-recipes.blogspot.com

    ReplyDelete